திருக்குறள்.
இன்பத்துப்பால். களவியல். அதிகாரம் 113.4 காதற் சிறப்பு உரைத்தல்.
வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல்
அதற்குஅன்னள்நீங்கும் இடத்து
தெளிவுரை: ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும்போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.
“அன்பின் வழியது உயிர்நிலை” என்று இன்னொரு குறள் உண்டு. தான் அன்பு செலுத்துவதற்கு ஒருவரும், தன் மேல் அன்பு செலுத்துவதற்கு ஒருவரும் இருக்கும் வரை, இந்த உடலில் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்க ஆசைப் படும்.
எனவேதான் தற்கொலை எண்ணங்களை தவிர்க்க நாய் அல்லது பூனை வளர்க்க ஆலோசனை சொல்வார்கள்.
அத்தகைய அன்பினை இறைவன் மேலும் செலுத்தலாம். அது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்றோருக்கு மிக பருத்த உடலாக இருந்தாலும் நீண்ட ஆயுளை தந்தது.
இதையே நீர்க்குமுளி போன்ற நிலையற்ற வாழ்க்கை என்று இந்து சமய வழிபாட்டு தத்துவங்களில் சொன்னார்கள். எனவே வாழ்வில் வீடு பேறு அடைய வேண்டும் என்று சொன்னார்கள். இங்கே வீடுபேறு என்பது முக்தியை குறிக்கும். இது இந்து சமயத்தில் பிறவா நிலை குறிக்கும். இஸ்லாமிய சமயத்தில் அல்லா நிர்மாணம் செய்த சொர்க்கத்துக்கு நுழைவு. கிருத்துவத்தில் பரலோக சாம்ராஜ்யத்தில் இறுதித் தீர்ப்பு நாள் அன்று கிடைக்கும் இடம். நானும் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். “உலகம் அழியப் போகிறது. வாங்க, வாங்க .. வேகமா போயி, பரலோக சாம்ராஜ்யத்தில் சீட் பிடிக்கலாம்” என்று சொல்லும் கும்பல் ஓய்ந்த பாடில்லை.
அன்பின் வழி உயிர்நிலை. அன்பே சிவம். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். எல்லா உயிரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லால் வேறொன்றறியேன் இறையே பராபரமே.
இதன் வடமொழி ஆக்கம் ‘ சர்வ ஜன சுகினோ பவந்து ‘
இவையே இந்து தர்ம நெறியின் அடிப்படை. எனவே இறைவனை எல்லாவற்றிலும் காண்கிறோம்.
எந்த வித நிபந்தனை இல்லாத அன்பு. அதுவே இந்து மதம்.